Monday, 29th April 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாடகக் கலை வழியே தோன்றியது சினிமா என்றாலும்நாடகக் கலைக்கு இன்றளவும் அதன் தனித்துவம் குறைவதில்லை. நாடகக்கலையில் உள்ளவர்களில் பலர் இன்றைய சினிமாவில் முன்னனி நட்சத்ததிரங்களாக வந்து வெற்றியை தடம் பதித்துள்ளனர்.
அதில் நடிகவேல் எம்.ஆர். "ராதா" நாடகம் சினிமா என இரண்டிலும் தன்னை நகைச்சுவை நடிகராகவும் வெற்றி களம் கண்டவர். அவரது குடும்ப மரபு வழி வாரிசுகளாக ராதாரவி , கலையரசி ராதிகா போன்றோர் இப்பொழதும் சிறந்த நடிப்பு திறமையால் சாதித்து வருகின்றனர். கலைத்துறையில் அவர்களது குடும்பத்தினை கெளரவிக்கும் வகையில் நடிகவேல் எம்.ஆர்.ராதா நினைவு நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை "கோவை நடன, நாடக சினிமா நடிகர் சங்கம் நடத்தியுள்ளனர்.
இக்குழுவில் கலந்து கொண்ட இயக்குநர் "பரூக்"யிடம் இதுபற்றி கேட்டபொழுது, இந்த சங்கம் எங்கள் சினிமா கலைஞர்களுக்கு மிகவும் பயன் உள்ள வகையில் உள்ளது. சினிமா வாய்ப்பு தேடுபவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியை செய்து வருகிறார் தலைவர் முத்துக்குமார். அந்தவகையில் கிரிக்கெட் போட்டி மே மாதம் மூன்று நாட்கள் நடை பெற்றது. அப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ராதாரவி கோப்பையை வழங்கியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார்.
- அகரம் ராமதாஸ்